சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் கடந்த வியாழன் அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் ஊழல் வழக்கில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் இந்த ஊழல் வழக்கில் குற்றமற்றவன். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை போக்குவதில் நான் கவனம் செலுத்த உள்ளேன் என்றார். சிங்கப்பூர் எப்1 கார் பந்தயத்தில் தொழில் அதிபர் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றதாக ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இவர் அரசியலில் இருந்து வருகிறார். இவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டில் முதல்முறையாக அமைச்சராக்கப்பட்டார் கடந்த 2021 இல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் அதோடு அவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தையும் கவனித்து வருகிறார்.














