சிங்கப்பூரில் சரக்கு கப்பல் விபத்து - கடலில் எண்ணெய் கலந்தது

June 18, 2024

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து கடலில் பரவியது. சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு கடற்பகுதியில் எரிபொருள் விநியோக கப்பலான மறைன் ஹானர் என்ற சரக்கு கப்பல் நின்று கொண்டிருந்தது. அப்போது நெதர்லாந்து நாட்டின் தூர்வாரும் கப்பல் புக்ஸ் மேக்சிமா அவ்வழியாக சென்றது. அது நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது மோதியது. இதில் அந்த கப்பலின் எண்ணெய் டேங்கர் சேதம் ஆகியது. இதனால் எண்ணெய் கசிந்து […]

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து கடலில் பரவியது.

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு கடற்பகுதியில் எரிபொருள் விநியோக கப்பலான மறைன் ஹானர் என்ற சரக்கு கப்பல் நின்று கொண்டிருந்தது. அப்போது நெதர்லாந்து நாட்டின் தூர்வாரும் கப்பல் புக்ஸ் மேக்சிமா அவ்வழியாக சென்றது. அது நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது மோதியது. இதில் அந்த கப்பலின் எண்ணெய் டேங்கர் சேதம் ஆகியது. இதனால் எண்ணெய் கசிந்து வெளியேறி கடலில் பரவியது. இதனால் சுற்றுலா தளமான சென்டோசா கடற்கரை எண்ணெய் படலமாக தென்படுகிறது. அங்கு ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து கடந்த வெள்ளியன்று நடந்தது.

எண்ணெய் கசிவு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் கடற்கரையில் அவை அடித்து வரப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் சுமார் 250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் இந்த படலம் பரவாமல் தடுப்பதற்கு 1.5 கிலோமீட்டர் நீளத்திற்கு மிதவை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் கூறியுள்ளது. இந்த எண்ணை கசிவால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதம் மற்றும் விலங்குகள் பாதிப்பு குறித்து உயிரியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu