வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஒரே படிவம் வெளியிடப்பட உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு பல்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து, ஒரே படிவம் கடந்து 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஐடிஆர் 2, 3, 5, 6 படிவங்கள் எளிமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஐடிஆர் 1 முதல் மற்றும் 4 படிவங்கள் ஏற்கனவே உள்ளது போல் தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, சம்பளதாரர்கள் ஐடிஆர் 1 படிவத்தையும், சுயதொழில் செய்வோர் ஐடிஆர் 4 படிவத்தையும் பயன்படுத்தினால் போதுமானது என கூறப்பட்டுள்ளது. ஐடிஆர் 2, 3, 5, 6 ஆகிய படிவங்களை பயன்படுத்துபவர்கள் புதிய ஒருங்கிணைந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த படிவம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில், இந்த முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.