கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது, அவரது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கைதாவதற்கும் முன்பு எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது.Sivaraman who was arrested in the Krishnagiri sexual harassment case died














