இமாச்சலப் பிரதேசத்தில் கட்சி மாறி வாக்களித்த ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறு பேர் மாற்றி வாக்களித்ததால் பா.ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் பா.ஜனதா சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது . இதில் நேற்று நடைபெற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 15 எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன் பின்னர் பட்ஜெட் மீதான தீர்மானம் நடைபெற்றது. தற்போது இன்று காலை மாற்றி வாக்களித்த ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.