ஈராக் விமான நிலையம் மீது துருக்கி ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலி.
ஈராக்கின் வடக்கு பகுதியில் சுலைமானியா உள்ளது. அங்கு இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அர்பட் நகர் அமைந்துள்ளது. இது குர்தீஸ் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள விமான நிலையத்தை குர்திஸ்தான் ஆதரவாளர்கள் போர் பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்து இயக்கப்படும் விமானங்கள் துருக்கி நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த போராட்டக்காரர்கள் பயன்படுத்தினர்.இதனால் துருக்கி ராணுவத்தினர் இந்த விமான நிலையத்தை தகர்க்கத் திட்டமிட்டனர். அதன்படி நவீன ட்ரோ ன்களை பயன்படுத்தி அர்பட் விமான நிலையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பார்க்காத குர்திஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இருந்தும், அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இந்த விமான நிலையம் தரைமட்டமாகியது. இந்த தாக்குதலில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல படுகாயம் அடைந்தனர்.