சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவில் மூளை அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூ சயின்டிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், இது தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.கிமு 750 மற்றும் 800 ஆண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடு சீனாவில் இருந்து கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்ததில், அந்த மனிதனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதும், அது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அந்த மண்டை ஓட்டில், அறுவை சிகிச்சை செய்வதற்கான துளை போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், மிகவும் நவீனமான முறையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இது அறிவியல் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.