சர்வதேச அளவில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் உயர்ந்துள்ளன. இஸ்ரேல் இந்த நாடுகளுக்கு கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்லோவாக்கியா பாராளுமன்றத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது. அதன்படி, அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் கோலோப், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார்.