இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் வர்த்தக மதிப்பு, 2 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் கைபேசிகள், இந்திய ஏற்றுமதியில் 90% ஆக்கிரமித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்த ஏற்றுமதியில், 9 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இந்த இரு கைபேசிகளின் ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் கைபேசிகள் ஏற்றுமதி மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், இந்தியாவின் மாதாந்திர ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மதிப்பு ஒரு பில்லியன் டாலரைக் கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், மொத்த ஏற்றுமதியில், 55% ஆப்பிள் கைபேசிகளும், 35% சாம்சங் கைபேசிகளும், 10% இதர கைபேசிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.