உத்தர பிரதேச மாணவர்களுக்கு ரூ.3,600 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்கள்

February 22, 2023

உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்க பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசில், மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா சட்டசபையில் இன்று 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.6.90 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு ரூ.6.15 லட்சம் கோடியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் சுவாமி விவேகானந்தர் […]

உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்க பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசில், மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா சட்டசபையில் இன்று 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.6.90 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு ரூ.6.15 லட்சம் கோடியாக இருந்தது.

இந்த பட்ஜெட்டில் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜலஜீவன் திட்டத்திற்கு ரூ.25,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu