போகிப் பண்டிகை மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகளுக்கு விமான நேர மாற்றங்கள் குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து அதிகாலை வரவிருக்கும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு கழிவுகள் எரிக்கப்படுவதால், விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் புகை மூட்டம் உருவாகியுள்ளது. இதனால், சென்னை விமான நிலையம், ஓடுபாதைகள் உள்ளிட்ட பகுதிகள் பனிமூட்டம் மற்றும் புகையால் சூழப்பட்டுள்ளன.