பாகிஸ்தானில் புகைமூட்டம் காரணமாக 24-ந்தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்

November 16, 2024

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு காரணமாக 24-ந்தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து, காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 17-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. புகைமூட்டம் காரணமாக, இந்த விடுமுறை 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் முறையில் கல்வி வழங்கத் தொடங்கிவிட்டன. முர்ரீ மாவட்டத்திற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, […]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு காரணமாக 24-ந்தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து, காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 17-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. புகைமூட்டம் காரணமாக, இந்த விடுமுறை 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் முறையில் கல்வி வழங்கத் தொடங்கிவிட்டன. முர்ரீ மாவட்டத்திற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் நிலவிய மோசமான புகைமூட்டம் காரணமாக, பஞ்சாப் அரசு வாரத்திற்கு 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இன்றும் நாளையும் இது தொடரும், மற்றும் திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu