ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாஃப்ட் பேங்க், பேடிஎம் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இன்று பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சாஃப்ட் பேங்க் குழுமம் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2.17% பேடிஎம் பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்பனை செய்துள்ளது. தொடர்ச்சியாக, பேடிஎம் பங்குகளை சாப்ட் பேங்க் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 செப்டம்பரில் 17.5% பங்குகளை கொண்டிருந்த சாஃப்ட் பேங்க், தற்போது வெறும் 2.83% பேடிஎம் பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் அண்மை விற்பனை குறித்த செய்தி வெளியான பின்னர், பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 4% வீழ்ச்சி அடைந்து, ஒரு பங்கு 391 ரூபாய் அளவில் வர்த்தகம் ஆகிறது.