வரும் நவம்பர் 30 ஆம் தேதி, சூரிய புயல் பூமியை தாக்கும் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அன்றைய தினத்தில், சிறிய அளவில் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரியனிலிருந்து வெளிப்பட்ட அதிசக்தி வாய்ந்த கதிர்கள் ஜி2 ரகத்தில் இருந்தன. இது 15 மணி நேரம் நீடித்தது. இதன் விளைவாக, நவம்பர் 30 அன்று சூரிய புயல் பூமியை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், ஆரோராக்கள் பரவலாக தென்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட இடங்களில் சிறிய அளவிலான தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு நிகழும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறை, பூமியின் தெற்கு பகுதியில் சூரிய புயல் பாதிப்பு நிகழலாம் என கருதப்படுகிறது.