நேற்று அதிசக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இந்த நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நாளையும் மிகப்பெரிய சூரிய புயல் பூமியை தாக்க கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நாளைய தினம், மிகவும் சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, விமான தகவல் தொடர்பு சேவைகள், செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் தொலை தொடர்பு சேவைகள் ஆகியவை பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 3 முதல் 30 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் இயங்கும் ரேடியோ சேவைகள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் பரிமாற்ற சேவைகள் பாதிக்கப்படுவதற்கு 60% வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து 3555 மற்றும் 3559 ஆகிய புள்ளிகள் வெளியேற்றிய கதிர்கள் பூமியை தாக்குவதால் இந்த புயல் ஏற்படுகிறது என சொல்லப்பட்டுள்ளது.