கடந்த பிப்ரவரி 27, 28 ஆம் தேதிகளில், அதிதீவிர சூரிய புயல் பூமியைத் தாக்கியது. இந்த சூரிய புயலால், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், வழக்கமாக ஆரோராக்கள் தென்படும் பகுதிகளை விட, வேறு சில பகுதிகளிலும் ஆரோராக்கள் தென்பட்டதாக, இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது.
சூரிய புயல் காரணமாக, பூமியின் காந்தப்புலம் பாதிக்கப்பட்டு, ஆரோராக்கள் தோன்றும். அந்த வகையில், தெற்கு கொலராடோ பகுதியில் ஆரோராக்கள் தென்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் சூரிய கதிர்கள் வானத்தில் வர்ணஜாலம் நிகழ்த்தின. அதுமட்டுமின்றி, பிரிட்டனைச் சேர்ந்த கிராஸ்ஹோம் பகுதியிலும் ஆரோராக்கள் தென்பட்டுள்ளன. பொதுவாக, இந்தப் பகுதியில் ஆரோராக்கள் காணப்படுவதில்லை. எனவே, இந்தப் பகுதியில் தென்பட்ட ஆரோராக்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வெறும் கண்ணால் மனிதர்கள் காணக்கூடிய வகையில் இந்த ஆரோராக்கள் அமைந்துள்ளன.
ஆரோராக்களை பதிவு செய்த பொதுமக்கள் பலரும், இணையத்தில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், நாசா விஞ்ஞானி ஒருவர், விண்வெளியில் இருந்து ஆரோராக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.