சூரியனிலிருந்து வெளிப்பட்ட அதன் பிளாஸ்மா பொருள், பூமியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. கிட்டத்தட்ட மணிக்கு 3.6 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் இது பயணித்து வருகிறது. எனவே, எந்த நேரத்திலும் பூமி இந்த சூரிய புயலை எதிர்கொள்ளலாம். இதனால், பூமியின் காந்தப்புலம் மிகவும் பாதிப்படைய உள்ளது. இது G3 ரக சூரிய புயலாக பூமியை தாக்கும். இதன் விளைவாக, துருவ ஒளிகள் எனப்படும் ஆரோராக்கள் தென்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சூரியனில் பூமியை நோக்கி இருந்த கரும்புள்ளி ஒன்று மே 9ம் தேதி வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிப்பட்ட பிளாஸ்மா பூமியை வந்தடைய உள்ளது. இதனால் குறைந்த உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் சிறிய செயற்கைக்கோள்கள் பாதிப்படையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.