வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், பல்வேறு சூரிய புயல்கள் பூமியைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பில் AR3380 என்ற சூரிய கரும்புள்ளி உள்ளது. இது தொடர் மாற்றங்கள் அடைந்து வருவதால், அதி தீவிர சூரிய கதிர்கள் வெளிப்பட்டு வருகின்றன. இது பூமியை நோக்கிய திசையில் அமைந்துள்ளதால், எம் ரக (MClass) சூரிய புயல் தாக்கக்கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். NOAA அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், இந்த சூரிய புயல் காரணமாக செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுவதுடன், தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில், எம் கிளாஸ் சூரிய புயல் பூமியை தாக்கிய நிலையில், அதன் தொடர் நிகழ்வுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என கூறியுள்ளனர். “முந்தைய மாதங்களில் ஏற்பட்ட சூரிய புயலை விட தற்போதைய புயலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. எனினும், ஜிபிஎஸ் சேவைகள், ட்ரோன் இயக்கம் போன்றவை பாதிக்கப்படலாம். அத்துடன், விமானங்கள் தாமதமாகும் சூழல் ஏற்படலாம். மேலும், கப்பல் போக்குவரத்து பாதுகாக்கப்படலாம்” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.