சோமாலியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
சோமாலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கனம் மழை பெய்து வருகிறது. இதுவரை சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த கன மழை காரணமாக சோமாலியாவின் கிடோ பகுதி கடுமையாக பாதித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என அந்நாட்டு செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் தாவூடு அவைஸ் கூறியுள்ளார்.
மக்களுக்கு ஐநா மனிதாபிமான விவகார அலுவலகம் 2.5 கோடி டாலர் நிவாரண உதவி வழங்கி உள்ளது. இந்த கனமழை குறித்து முன்னெச்சரிக்கை தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் உயிர் சேதம் குறைந்திருக்கும் என்று ஐநா தகவல் அளித்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பக்கத்து நாடான கென்யாவிலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.