சோமாலியாவில் காலரா தொற்று நோயை கட்டுப்படுத்த 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி மருந்து வழங்க ஐநா சபை முடிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் காலரா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 4500 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது அங்கு மழைக்காலம் தொடங்க உள்ளதால் காலரா நோய் பாதிப்பு அதிகமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சோமாலியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி மருந்து வழங்க ஐநா சபை முடிவு செய்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 20 கோடியாகும். முதல் கட்டமாக பெரும் பாதிப்புக்கு உள்ளான ஐந்து மாகாணங்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக ஐநா கூறியுள்ளது.