சோமாலியாவை சேர்ந்த 70 பேர், இரண்டு படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு பயணம் செய்யும்போது, எதிர்பாராத வகையில் இரு படகுகளும் விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த ஒரு நாடு. இந்நாட்டை சேர்ந்த பலர், பொருளாதார முன்னேற்றம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆபத்தான கடல்வழி பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த பயணங்களின் போது, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. சமீபத்தில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர், இரண்டு படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பா செல்லத் தொடங்கினர். பயணத்தின் போது, எதிர்பாராத வகையில் இரு படகுகளும் விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.














