பெண்கள் மீதான அடக்குமுறைகள் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு உதவித் திட்டங்கள் நிறுத்தம் - ஐ நா அறிவிப்பு

December 29, 2022

தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. அங்கு, பெண் குழந்தைகள் கல்வி பயிலவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஐ நா சபையின் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சில உதவித்திட்டங்கள் இதன் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ நா அறிவித்துள்ளது. ஐ நா சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மற்றும் அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ், “மனிதாபிமான பணிகளில் […]

தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. அங்கு, பெண் குழந்தைகள் கல்வி பயிலவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஐ நா சபையின் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சில உதவித்திட்டங்கள் இதன் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ நா அறிவித்துள்ளது.

ஐ நா சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மற்றும் அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ், “மனிதாபிமான பணிகளில் இருந்து பெண்களை தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே, பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால் முக்கியமான திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பெண் உதவி பணியாளர்கள் இல்லாமல், கொள்கை ரீதியான, மனிதாபிமான உதவிகளை எங்களால் வழங்க முடியாது. ஆனால், தொடர்ந்து, பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு, சுதந்திரமான, கொள்கை ரீதியான, உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் உறுதியுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu