பாகிஸ்தானில், பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குலசி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கையாகவும், பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.