சோனியா காந்தி இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவையில் எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவரும் ஆன சோனியா காந்தி இம்முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இவை தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் எம்.பி மனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் அவர் ராஜஸ்தான் வருகை புரிந்தார். அவருடன் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரும் இருந்தனர்.