ஓபன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு செயலி சோரா வீடியோ உருவாக்கும் செயலி ஆகும்.
இது இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மிரா மராட்டி கூறியுள்ளார். நாம் எழுத்து மூலமாக தருகிற தகவலைக் கொண்டு அதை வீடியோவாக மாற்றக்கூடிய சோரா என்கிற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. முன்னதாக பயனர்கள் அவர்களின் உள்ளீடுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவற்றை 60 நொடி வீடியோவாக சோரா செயலி உருவாக்கியது. இது தொழில்நுட்ப உலகில் பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.
தற்போது தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு மட்டுமே சோரா பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மிரா பேசுகையில், சோராவை மேலும் மேம்படுத்தி வீடியோவுடன் ஆடியோவையும் தருகிற வகையில் உயர்த்த இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் இந்த செயலி தனி உரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் என்றும் பொது பிரபலங்கள் குறித்த வீடியோக்களை உருவாக்காது என்றும் கூறினார். இந்த வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு உருவாக்கியது என்பதை காட்டுவதற்காக வாட்டர் மார்க் பொறிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.