தென் ஆப்பிரிக்காவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் விளைவாக, 205000 கோழிகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக 60க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பதிவுகள் வெளிவந்துள்ளன. எனவே, பேரழிவை தடுக்க 2.5 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிநபர் ஒருவர் வாங்கும் முட்டையின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வேளாண் துறை மற்றும் சுகாதாரத்துறை, பறவை காய்ச்சல் தொடர்பான நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.