தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதே சமயத்தில் இதை பயன்படுத்தவதால் பல்வேறு தீமைகளும் உண்டு. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி போன்றவற்றிற்கு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கிறது. இதில் அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர். எனவே தெற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் 14 வயது உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல் மந்திரி பீட்டர் மலினன்காஸ் கூறியுள்ளார். இந்த புது விதியின்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டுமானால் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இதற்கான நடைமுறையை ஆராய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரென்ச் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு அங்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.