சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்த கிளாம்பக்கத்தில் புதிய பேருந்து நிலையம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தட பஸ்களும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கடந்த 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த தென் மாவட்டங்களுக்கான 710 பேருந்துகளின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்குகின்றன. மேலும் 160 பஸ் களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.