சென்னையில் இன்று கல்லூரிகளுக்கு இடையேயான தென்னிந்திய கால்பந்து போட்டி லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் மர்பி நினைவு கோப்பைக்கான தென்னிந்திய கல்லூரிகள் இடையேயான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 23 ஆவது கல்லூரிகள் கால்பந்து போட்டி இன்று தொடங்கி 9ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் லயோலா, என்சிசி, செயின்ட் ஜோசப், அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி உள்பட 20 கல்லூரிகள் பங்கேற்கின்றன. இதில் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் முதல் பரிசு பெறும் அணி ரூபாய் 10000, 2,3,4 ஆகிய இடங்களுக்கு முறையே 7000,5000, 3000 என பரிசு வழங்கப்படும். சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.