தென்கொரியா, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. முதல் செயற்கைக்கோள் வரும் வியாழக்கிழமை ஏவப்படுவதாக இருந்த நிலையில், திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், தென் கொரியா 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை பால்கன் 9 ராக்கெட் மூலம் கலிபோர்னியா ஏவுதளத்தில் இருந்து தென்கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் செலுத்தப்பட இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக, திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சனிக்கிழமை செயற்கைக்கோள் ஏவப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ள நிலையில், தென்கொரியா உளவு செயற்கைக்கோள் செலுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.