தனிப்பட்ட பயனர்களின் விவரங்கள் வெளியே தெரிய வந்துள்ளதால் ChatGPT என்னும் ஏஐ நிறுவனத்திற்கு தென்கொரியா அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஓப்பன் ஏஐ நிறுவனம் வெளியிட்ட ChatGPT என்பது கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத, கம்ப்யூட்டர் கோடிங் என பயனர்கள் கேட்கும் சகல கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 687 தென்கொரியா நாட்டைச் சேர்ந்த பயனாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிறுவனம் சந்தா பயனர்களின் தனிப்பட்ட விவரங்களான பெயர், மின்னஞ்சல், கிரெடிட் கார்டின் எண்கள், காலாவதி தேதி, பேமெண்ட் போன்ற அனைத்து தகவல்களையும் கசியவிட்டுள்ளது. இதனை உறுதி செய்த தென்கொரியா அரசு நாட்டின் தனிநபர் பாதுகாப்பு தகவல் பாதுகாப்பு ஆணையம் நிறுவனத்திற்கு 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த தகவல் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் ChatGPT ஓபன் சோர்ஸ் லைப்ரரியில் ஏற்பட்ட பிழை என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.














