தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த வாரம், அதிபர் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இது ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர், அவசர நிலை கைவிடப்பட்டது. ஆனால், அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக்க கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவருக்கு எதிரான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.