ஜப்பானின் தெற்கே உள்ள ஒக்கினாவா தீவு அருகே பசபிக் கடலில் நேற்று வெப்ப மண்டல புயல் உருவானது.
இந்த புயலுக்கு ஜோங்தாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வேகமாக நகர்ந்து இன்று தென்கொரியாவை அடைந்தது. இதன் காரணமாக தென்கொரிய கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் நிலப் பகுதியை நெருங்கும் போது சூறைக்காற்று வீசும் என்றும் அப்பொழுது கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக பிரபல சுற்றுலா தளமான ஜஜூ தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று அதிகப்பட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை ஜோங்தாரி புயல் ஜஜூ தீவை கடக்கும். தலைநகர் சியோலுக்கு அருகே நாளை காலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.