தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வடகொரியா, தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த 3 நாடுகளும், தொடர்ந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நீர்மூழ்கி எதிர்ப்பு ஒத்திகையை, வழக்கமாக நடத்த 3 நாடுகளும் திட்டமிட்டுள்ளன. சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருவதற்கு எதிராக, இந்த ஒத்திகை இருக்கும்” என சொல்லப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், வடகொரியா, செயற்கை சுனாமியை உருவாக்கும் ஏவுகணை சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.