தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீஜெ மீங்கை மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லிஜே மீங் இன்று புசன் நகருக்கு சென்றார். அங்கு அவர் விமான நிலையத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். அந்த மர்ம நபர் லிஜேவிடம் ஆட்டோகிராப் வாங்குவது போல் அருகில் வந்தார். அருகில் வந்ததும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீ -இன் கழுத்தில் குத்தினார். இதனால் லீ இரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியேறாமல் இருக்க தங்களது கை குட்டைகளால் அழுத்திப்பிடித்தனர். பின்பு அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். தென்கொரியாவில் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.