வட தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாகும் தென்மேற்கு பருவமழை

வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 30ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நாடு முழுவதும் அதிக மழைப்பொழிவை வழங்குவது தென்மேற்கு பருவமழை ஆகும். இதன் காரணமாக கேரள மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் அதிகமான கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோன்று சென்னையிலும் கோடை வெப்பம் சற்று தணிந்து மாலை […]

வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த 30ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நாடு முழுவதும் அதிக மழைப்பொழிவை வழங்குவது தென்மேற்கு பருவமழை ஆகும். இதன் காரணமாக கேரள மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில்
அதிகமான கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோன்று சென்னையிலும் கோடை வெப்பம் சற்று தணிந்து மாலை நேரங்களில் மேகமூட்டங்கள் தென்பட்டு வந்தன. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி வரும் நிலையில் வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் கட்டி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற ஐந்தாம் தேதி வரை தென் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்றின் காரணமாக குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடலில் மத்திய பகுதிகள் உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu