இயல்பை விட அதிக அளவு தென்மேற்கு பருவமழை பெய்யும்

April 16, 2024

இந்திய வானிலை ஆய்வு மையம் இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்யும் என அறிவித்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் வரை இருக்கும் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை […]

இந்திய வானிலை ஆய்வு மையம் இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் வரை இருக்கும் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சராசரியாக பெய்யும் தென்மேற்கு பருவ மழையை விட இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்யும் எனவும் அதன்படி தென்மேற்கு பருவமழை 106 சதவீதம் வரை இருக்கும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்டகால சராசரி அளவான 87 சென்டிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu