குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுதும் முடிந்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய […]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுதும் முடிந்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. விண்வெளி தொடர்பான நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மின்னணு நிறுவனங்கள், மெக்கானிக்கல் நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu