மில்டன் சூறாவளியால் ஏற்பட்ட தாமதத்திற்கு பிறகு, ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ-8 விண்வெளி வீரர்கள் அக்டோபர் 23 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறினர். நாசாவின் மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸின் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் அடங்கிய இந்த குழு, பசிபிக் பெருங்கடலின் 260 மைல் உயரத்தில் இருந்து தங்கள் டிராகன் விண்கலம், எண்டெவர் மூலம் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். இந்த குழுவினர் அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு புளோரிடாவில் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 3 அன்று ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் க்ரூ 8 கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று க்ரூ-9 குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். அப்போது முதல் க்ரூ 8 கலத்தின் பூமி திரும்பும் பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது.