ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செப்டம்பர் 28 அன்று, அமெரிக்காவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்திலிருந்து க்ரூ 9 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாசாவைச் சேர்ந்த நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் க்ரூ 9 திட்டத்தில் பயணித்துள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. வீரர்கள் இருவரும் விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக பணியை தொடங்கியுள்ளனர். அவர்கள் அடுத்த ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். வரும் பிப்ரவரியில், இவர்களுடன் சேர்ந்து, ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசாவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரும் பூமிக்கு திரும்பி வர உள்ளனர்.