அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செப்டம்பர் 17ஆம் தேதி இரண்டு ஐரோப்பிய கலிலியோ நேவிகேஷன் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியில் இருந்து 14,430 மைல்கள் (23,222 கிமீ) உயரத்தில் உள்ள ஐரோப்பாவின் கலிலியோ விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயற்கைகோள்கள் நிறுவப்பட்டன. அமெரிக்காவின் கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த ஏவுதல் நடைபெற்றது. ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த ராக்கெட் ஏற்கனவே 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுதல் 2023 இன் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் உடனான ஐரோப்பாவின் கூட்டாண்மையை தொடர்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) பிற விருப்பங்களான ரஷ்ய சோயுஸ் ராக்கெட் மற்றும் ஏரியன் 5 ஹெவி லிஃப்டர் ஆகியவை இல்லாததால் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவுதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.