நேற்று, 54 புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கணவரல் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 4:34 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்திய பின்னர், அட்லாண்டிக் கடலில் பத்திரமாக பால்கான் 9 தரையிறங்கியது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 2021 ஆம் ஆண்டு, 31 ராக்கெட் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. தற்போது, 2022 ஆம் ஆண்டில், இரு மடங்காக, 60 திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவுதல் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஜெஸ்ஸி ஆண்டர்சன் கூறுகையில், “எங்களுக்குள்ள புதிய உரிமத்தின் படி, புதிய சுற்றுவட்ட பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்த முடியும். எனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதல் சேவையை, வேகமான முறையில் வழங்க முடியும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.