அமெரிக்க உளவு செயற்கைகோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்க உளவு பணிக்கான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக ஏவியது. விண்வெளியை மையமாகக் கொண்டு செயல்படும் உளவு செயற்கை கோள்களை அமெரிக்கா ஸ்பேஸ் நிறுவனத்தின் உதவியுடன் நேற்று வானில் ஏவியது. இந்த ஆண்டு முழுவதும் ஏவுகணைகள் வரிசையாக ஏவப்பட உள்ளது. இந்த வகை செயற்கைக்கோள்கள் உலகத்தின் எந்த மூலையில் உள்ள இலக்கையும் கண்காணிக்கும் திறன் வாய்ந்ததாகும். இதே போன்ற நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க உளவுத்துறைக்காக உருவாக்கியதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று தெற்கு […]

அமெரிக்க உளவு பணிக்கான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக ஏவியது.

விண்வெளியை மையமாகக் கொண்டு செயல்படும் உளவு செயற்கை கோள்களை அமெரிக்கா ஸ்பேஸ் நிறுவனத்தின் உதவியுடன் நேற்று வானில் ஏவியது. இந்த ஆண்டு முழுவதும் ஏவுகணைகள் வரிசையாக ஏவப்பட உள்ளது. இந்த வகை செயற்கைக்கோள்கள் உலகத்தின் எந்த மூலையில் உள்ள இலக்கையும் கண்காணிக்கும் திறன் வாய்ந்ததாகும். இதே போன்ற நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க உளவுத்துறைக்காக உருவாக்கியதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை செயற்கை கோள்களுடன் அதிகாலை 4 மணிக்கு ஏவப்பட்டது. அமெரிக்க உளவுத்துறைக்கு நார்த் ரோப் பிரம்மன் நிறுவனம் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கிறது. இதனுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து பணியாற்றுகிறது. இந்த ஆண்டு சுமார் 6 ஏவுகணைகள் அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது. 2028 வரை இது தொடரும். இந்த முறை எத்தனை செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்த தகவல் இது வரை வெளிவரவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu