விண்ணில் செலுத்தப்பட்டது நோவா சி - பிப்ரவரி 22 நிலவில் தரையிறக்கம்

February 15, 2024

நாசாவின் தனியார் நிலவு திட்டமான நோவா சி லேண்டர் திட்டம், காதலர் தினத்தன்று ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை, ப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நோவா சி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் நோவா சி சுமந்து செல்லப்பட்டுள்ளது. இது வரும் வியாழக்கிழமை( 22 ஆம் தேதி) நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டியூட்டிவ் மெஷின்ஸ் என்ற […]

நாசாவின் தனியார் நிலவு திட்டமான நோவா சி லேண்டர் திட்டம், காதலர் தினத்தன்று ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை, ப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நோவா சி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் நோவா சி சுமந்து செல்லப்பட்டுள்ளது. இது வரும் வியாழக்கிழமை( 22 ஆம் தேதி) நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டியூட்டிவ் மெஷின்ஸ் என்ற நிறுவனம் நோவா சி லேண்டரை தயாரித்துள்ளது. இதில் மொத்தம் 12 சுமை பாகங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதில் 5 சுமை பாகங்கள் நாசா உடையது; மற்றவை வணிக ரீதியிலானது. நோவா சி ஏவப்படுவதை நாசா நேரலையில் ஒளிபரப்பு செய்தது. இது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில், நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெறும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu