நாசா விண்வெளி திட்டம் கடைசி நிமிடத்தில் ரத்து

February 27, 2023

இன்றைய தினம், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதற்கு சரியாக 2 நிமிடங்களுக்கு முன்னால், திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ராக்கெட்டின் கிரவுண்டிங் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்த ராக்கெட்டை எரியூட்டுவதற்காக TEA […]

இன்றைய தினம், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதற்கு சரியாக 2 நிமிடங்களுக்கு முன்னால், திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ராக்கெட்டின் கிரவுண்டிங் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்த ராக்கெட்டை எரியூட்டுவதற்காக TEA - TEB என்ற திரவப் பொருள் பயன்படுத்தப்பட இருந்தது. இந்நிலையில், அது சார்ந்த துறையில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராக்கெட்டில் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ராக்கெட்டில் அமர வைக்கப்பட்டிருந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கோளாறு சரி செய்வதற்கான பணி நிறைவடையும் வரை, அவர்கள் கென்னடி ராக்கெட் ஏவு தளத்திலேயே தங்க வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோளாறு முற்றிலுமாக சரி செய்யப்பட்டு, வரும் மார்ச் 2ம் தேதி அதிகாலை 12:34 மணிக்கு ராக்கெட் மீண்டும் ஏவப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu