ஆகஸ்ட் 26 அன்று, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலரிஸ் டான் ஏவப்படுகிறது. இந்த தனியார் விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வின் வரலாற்றில் பல முக்கியமான மைல்கற்களை எட்டுகிறது.
ஸ்பேஸ் எக்ஸின் புதிய EVA ஸ்பேஸ் சூட்களை சோதித்தல், அறிவியல் சோதனைகளை நடத்துதல் மற்றும் ஸ்டார்லிங்க் தகவல்தொடர்புகளை சோதித்தல் போன்ற முக்கியமான தொழில்நுட்ப சோதனைகள் போலாரிஸ் டான்திட்டத்தில் நடைபெறுகின்றன. மேலும், அப்பல்லோ திட்டத்திற்கு பிறகு பூமியின் மிக உயர்ந்த சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டது போலாரிஸ் டான் ஆகும். மேலும், முதல் தனியார் விண்வெளி நடைபயணம் இந்த திட்டத்தில் நடைபெற உள்ளது.