போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ஏவுகலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏவுகலன் மூலம் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 5-ம் தேதி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மார் ஆகிய விண்வெளி வீரர்கள் போயிங் ஸ்டார்லைனர் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பலமுறை இவர்களின் பயணத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். தற்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அவர்களை பூமிக்கு கொண்டு வரும் பயணமும் இரு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹீலியம் வாயு கசிவு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஜூலை 2ம் தேதி, திட்டமிட்டபடி ஸ்டார்லைனர் பயணம் அமையாது என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்பேஸ் நிறுவனத்தின் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் பூமிக்கு அழைத்து வரப்படலாம் என கூறப்படுகிறது.