ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுப்பை விண்ணில் செலுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகாலை 1:01 மணிக்கு ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 23 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டன.
இந்த ராக்கெட்டின் முதல் நிலை வெற்றிகரமாக அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஏ ஷார்ட்ஃபால் ஆஃப் கிராவிட்டி’ என்ற கப்பலில் தரையிறக்கப்பட்டது. இது இந்த ராக்கெட்டின் 12-வது பயணமாகும். மேலும், 9 வது முறையாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏற்றிச் சென்றுள்ளது.