ஸ்பேஸ் எக்ஸ் அடுத்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஏவுதலை நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் 26-ம் தேதி அதிகாலை 1:08 மணிக்கு ஏவவுள்ளது. இந்த ஏவுதலில், 24 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுமந்து செல்லப்படுகிறது. நிகழும் 2024 ஆம் ஆண்டில் நடக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 116 வது ஏவுதல் இதுவாகும். மொத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டங்களில் 80 ஏவுதல்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலை அமைப்பை விரிவாக்குவதற்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, 6,700 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் செயல்பாட்டில் உள்ளன.