கூடுதலாக 5 இரிடியம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

September 10, 2022

இரிடியம் நிறுவனம், விண்வெளியில் செயற்கைக்கோள் கூட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக, ஏற்கனவே, 75 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 திட்டத்தில் இவை விண்ணில் செலுத்தப்பட்டன. ஏழு முறைகளில், தலா 10 இரிடியம் செயற்கை கோள்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் விண்ணிற்குச் சென்றன. இறுதியாக, 8வது ராக்கெட்டில், 5 இரிடியம் செயற்கைக்கோள்களுடன் சேர்த்து, நாசா-ஜெர்மன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இரண்டு விண்கலங்கள் விண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2017 முதல் 2019 ஆம் […]

இரிடியம் நிறுவனம், விண்வெளியில் செயற்கைக்கோள் கூட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக, ஏற்கனவே, 75 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 திட்டத்தில் இவை விண்ணில் செலுத்தப்பட்டன. ஏழு முறைகளில், தலா 10 இரிடியம் செயற்கை கோள்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் விண்ணிற்குச் சென்றன. இறுதியாக, 8வது ராக்கெட்டில், 5 இரிடியம் செயற்கைக்கோள்களுடன் சேர்த்து, நாசா-ஜெர்மன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இரண்டு விண்கலங்கள் விண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் இவை நிகழ்ந்தன.

மீதமுள்ள 6 செயற்கை கோள்களை வாய்ப்பு ஏற்படும் போது விண்ணில் செலுத்த இரிடியம் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதுகுறித்து பேசிய இரிடியம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாட் டெஷ், "வரும் 2023 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் ஸ்பேஸ் போர்ஸ் தளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 மிஷன் மூலம் 5 இரிடியம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன" என்று அறிவித்தார். கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் குறித்த அறிக்கையில், "சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.

தற்போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு, இரிடியம் நிறுவனம் சார்பில், புத்தாக்க நிறுவனமான ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனத்திற்கு கிடப்பில் உள்ள 6 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. டேரன் 1 என்ற ராக்கெட்டில் அவை செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, அரிசொனாவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்களை, 2023ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இரிடியம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாட் டெஷ், "செயற்கைக்கோள்களை சேமித்து வைப்பதற்கு ஆகும் செலவை கணக்கில் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். ஆனால், ரிலேட்டிவிட்டி நிறுவனத்துடன் எந்தவித முறிவும் இல்லை. மீதமுள்ள ஒரு செயற்கைக்கோளை ரிலேட்டிவிட்டி நிறுவனத்தின் மிஷன் மூலம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நாங்களும் பங்கு பெறுவோம்" என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu